திருவள்ளூர் அருகே குழந்தைகளை கடத்த முயன்றவர் கைது

திருவள்ளூர் அருகே குழந்தைகளை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அருகே குழந்தைகளை கடத்த முயன்றவர் கைது
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மணவாளநகர், கண்ணையாநகர் பகுதியில் உள்ள காவேரி தெரு, வைகை தெரு, கருணாநிதி தெரு போன்ற பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் 4 பேர் அங்கும் இங்குமாக தெருக்களில் சுற்றி சுற்றி வந்தனர்.

அப்போது அவர்கள் அங்குள்ள வீடுகளை நோட்டமிட்டவாறு சென்று 3-க்கும் மேற்பட்ட வீடுகளின் வெளியே இருந்த குழந்தைகளை கடத்த முயன்றனர். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அவர்களை பிடிப்பதற்காக விரட்டி சென்றனர். இதை அறிந்த அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு தப்பியோடிய 4 பேரில் ஒருவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மீதமுள்ள 3 பேர் ஓட்டம் பிடித்தனர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மணவாள நகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிடிபட்ட வடமாநில நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சரியான பதில் எதுவும் சொல்லாததால் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தப்பியோடிய 3 பேர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com