ராட்சத அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவன் உடல் கரை ஒதுங்கியது

ராட்சத அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவன் உடல் கரை ஒதுங்கியது.
ராட்சத அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவன் உடல் கரை ஒதுங்கியது
Published on

சென்னை,

சென்னை பல்லாவரம் கலைவானி தெருவை சேர்ந்தவர் அக்பர் (வயது 17). இவர், தாம்பரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3-ந்தேதி அக்பர், தனது நண்பர்களான குரோம்பேட்டையை சேர்ந்த புருஷோத்தமன் (17), யுவராஜ் (17), இஞ்சேக் (17), தமிழ் (17), சதீஷ்குமார் (17), பல்லாவரத்தை சேர்ந்த ஜான் ரீகன் (17) ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார்.

அங்கு அக்பர், புருஷோத்தமன், யுவராஜ், ஜான் ரீகன் ஆகிய 4 பேரும் அவ்வையார் சிலைக்கு பின்புறம் உள்ள கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். மற்ற 3 பேரும், கரையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். உடனே அருகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து, புருஷோத்தமன், யுவராஜ், ஜான் ரீகனை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அக்பர் கடலில் மூழ்கி மாயமானார். இதுபற்றி மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவர் அக்பரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு துறைமுகம் அருகே அக்பரின் உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து வந்த போலீசார் அக்பரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com