தூசி அருகே கார் மோதி முதியவர் பலி

தூசி அருகே கார் மோதி முதியவர் பலியானார்.
தூசி அருகே கார் மோதி முதியவர் பலி
Published on

தூசி,

தூசி அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 78). இவர், அதே கிராமத்தில் இருக்கும் மகன் வேலு வீட்டிற்கு சென்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com