

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 1778 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதுவரையில் மாவட்டம் முழுவதும் 86 ஆயிரத்து 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 73 ஆயிரத்து 862 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.11 ஆயிரத்து 390 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1081பேர் கொரானா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 18 பேர் இறந்து உள்ளனர்.