காய்ச்சல் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்

குமரி மாவட்டத்தில் சளி மற்றும் காய்ச்சல் இருந்தாலும் பொதுமக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காய்ச்சல் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
Published on

நாகர்கோவில்,

காய்ச்சல், இருமல், சளி, மூச்சு விடுதலில் சிரமம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டாலும் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வெளியில் நடமாடுவதை தவிர்த்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கொரோனா பரவலை தடுக்க, பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com