கடம்பூர் அருகே யானை தாக்கி பெண் சாவு

கடம்பூர் அருகே யானை தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
கடம்பூர் அருகே யானை தாக்கி பெண் சாவு
Published on

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் அருகே கடம்பூரை அடுத்துள்ளது சின்னகுன்றி மலைக்கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் மாதன். அவருடைய மனைவி மாதம்மாள் (வயது 58). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். இந்த ஆடுகளை தினமும் காலையில் குன்றி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக அழைத்து செல்வார்.

அதன்படி நேற்று காலையில் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிகொண்டிருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த கெஞ்சன், சின்னத்தாயும் ஆடுகளுடன் வந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து பிளிறியபடி ஒரு யானை அவர்களை நோக்கி ஓடி வந்தது. இதனை கவனித்த 3 பேரும் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். இதனால் அவர்களை யானை துரத்தி சென்றது.

இதில் கெஞ்சனும், சின்னத்தாயும் யானையிடம் இருந்து தப்பித்து ஊருக்குள் ஓடி விட்டனர். மாதம்மாள் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை யானை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. பின்னர் அவரை காலால் மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து யானையை விரட்டிவிட்டனர். பின்னர் இதுபற்றி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் வந்து மாதம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com