நாகை மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 8 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். தமிழக மீனவர்களை சிறைபிடித்து வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நீடிப்பது மீனவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்கிறது
Published on

நாகப்பட்டினம்,

நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோடிலிங்கம். இவருடைய மகன் சண்முகநாதன் (வயது25). இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் தனது அண்ணன் மூர்த்தி (28), அதே பகுதியை சேர்ந்த முருகன் (35), தமிழ்மாறன் (45), கீச்சாங்குப்பத்தை சேர்ந்த குட்டியாண்டி (50), கோவிந்தன் (45), மகேந்திரன் (50), ஆறுமுகம் (50) ஆகியோருடன் கடந்த 3-ந் தேதி இரவு 11 மணி அளவில் நாகை கடுவையாற்று மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். இவர்கள் 8 பேரும் நேற்றுமுன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 40 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர், நாகை மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 8 பேரையும் சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகை கடற்படையினர் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

அட்டூழியம் தொடர்கிறது

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி சிறைபிடிப்பது, மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, மீனவர்களை தாக்குவது உள்ளிட்ட இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடற்படை நாகை மீனவர்களை மீண்டும் சிறைபிடித்து சென்றிருப்பது மீனவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com