இன்று முதல் ரெயில்கள் இயக்கம்: அரியலூர் ரெயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்

இன்று முதல் ரெயில்கள் இயக்கப்படுவதால் அரியலூர் ரெயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.
இன்று முதல் ரெயில்கள் இயக்கம்: அரியலூர் ரெயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரம்
Published on

தாமரைக்குளம்,

கொரோனா தொற்று பரவலை தடுக்க பொது போக்குவரத்து மற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு தமிழகத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் சிறப்பு ரெயில்களை இயக்க அனுமதி அளித்து அறிவித்திருந்தது. அதன்படி 5 சிறப்பு ரெயில்கள் மற்றும் கூடுதல் ரெயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றது. இந்த ரெயில்களில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்யலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது. அதன்படி முன்பதிவு நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.

அரியலூர் மார்க்கத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், வைகை மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களில் பயணம் செய்பவர்கள், ரெயில் நிலையத்திற்கு ரெயில் புறப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே வர வேண்டும். கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு அணிந்திருந்தால் மட்டுமே ரெயிலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அரியலூர் ரெயில் நிலைய மேலாளர் பிரசாத் தெரிவித்தார்.

மேலும் நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை கிடையாது. பயணிகள் மட்டுமே ரெயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். உடன் வருபவர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படும் நிலையில் அரியலூர் ரெயில் நிலையத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முன்பதிவு மையம் மற்றும் இருக்கைகள், நடைமேடை உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com