குளத்தில் மூழ்கி சிறுமி பலி

திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி ஒருவர் பலியாகினாள்.
குளத்தில் மூழ்கி சிறுமி பலி
Published on

திண்டுக்கல் :

திண்டுக்கல் அருகே ஆர்.எம்.காலனியை அடுத்த அசோக் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). பெயிண்டர்.

இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஹரிணி (16) என்ற மகளும், அருணாச்சலம் (13) என்ற மகனும் இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் சரவணன் பெயிண்டிங் வேலை செய்து கொண்டு இருந்தார்.

அவரை பார்க்க ஹரிணி மற்றும் அருணாச்சலம் ஆகியோர் சென்றனர்.

அப்போது அந்த வீட்டில் இருந்து ஹரிணி மட்டும் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அவள் வீடு திரும்பவில்லை. உடனே அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர்.

ஆனால் அவளை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் சரவணன் புகார் செய்தார்.

இதற்கிடையே பாலகிருஷ்ணாபுரம் செல்வி நகர் அருகே உள்ள சர்க்கையன் குளத்தில் நீரில் மூழ்கி ஒரு சிறுமி இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் இருந்து சிறுமியின் உடலை மீட்டனர்.

விசாரணையில், அந்த சிறுமி ஹரிணி என்பது தெரியவந்தது.

பின்னர் சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com