

வாணியம்பாடி,
ஆந்திர மாநிலத்தில் குப்பம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் அங்குள்ள 10-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை நிரப்பி புல்லூர் அணையை வந்தடைந்தது. அந்த தடுப்பணையும் நிரம்பி தமிழக பகுதியில் தணணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புல்லூர் அருகே மூலைக்கொல்லையிலிருந்து தடுப்பணைக்கு வரும்பாதையில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த நிலையில் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்றது. அப்போது பாலத்தின் இருபுறமும் சாலையில் அரிப்பு ஏற்பட்டதால் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்தது. இதனால் அந்த பாதை துண்டிக்கப்பட்டது.