

நாக்பூர்,
மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேயிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
இந்திய குடியரசு கட்சி, பா.ஜனதாவுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சில பொதுவான திட்டங்களில் அடிப்படையிலேயே இரு கட்சிகளும் ஒன்றாக செயல்பட்டு வருகின்றன. இதன்காரணமாக நாங்கள் பா.ஜனதாவுடன் கைகோர்த்து உள்ளோம்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் எங்களது கட்சி 10 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. மேலும் எங்கள் வேட்பாளர்கள் வேறு எந்த கட்சியின் சின்னத்திலும் போட்டியிட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.