சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

ஆலங்குளம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழக்கலங்கல் குருந்தன்மொழி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 46), கூலித்தொழிலாளி.

இவர் கடந்த 1-4-2015 அன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு 11 வயதான 7-ம் வகுப்பு மாணவி தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சிறுமியை அந்தோணி வாயை பொத்தி நைசாக தூக்கிச்சென்றார். பின்னர் ஒரு மறைவான இடத்தில் வைத்து சிறுமியின் வாயை பிளாஸ்டிக் கவரால் கட்டினார். அதன்பிறகு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுதொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அந்தோணியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி இந்திராணி விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட அந்தோணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த அபராத தொகையுடன் அரசு ரூ.2 லட்சமும் சேர்த்து மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்தோணியை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் பால்கனி ஆஜரானார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com