கடன் வாங்கி வளைகாப்பு நடத்தினார்: காதல் மனைவி திட்டியதால் வாலிபர் தற்கொலை

கடன் வாங்கி வளைகாப்பு நடத்தியதால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த பாலகிருஷ்ணன், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடன் வாங்கி வளைகாப்பு நடத்தினார்: காதல் மனைவி திட்டியதால் வாலிபர் தற்கொலை
Published on

செங்குன்றம்,

சென்னை மாதவரம் பால்பண்ணையை அடுத்த சின்னமாத்தூர் அருளானந்தம் நகர் ஜெயலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 26). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்யா(23) என்ற பெண்ணை காதலித்து, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

தற்போது சவுந்தர்யா, கர்ப்பமாக உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பாலகிருஷ்ணன், கடன் வாங்கி தனது காதல் மனைவிக்கு வளைகாப்பு நடத்தியதாக தெரிகிறது. இதையறிந்த சவுந்தர்யா, எதற்காக கடன் வாங்கி நடத்தினீர்கள்? என கணவனை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த பாலகிருஷ்ணன், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com