பரதராமியில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு

பரதராமியில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சித்தூரை சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
பரதராமியில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
Published on

குடியாத்தம்,

சித்தூரை அடுத்த பங்காருபாளையம் ரால்லுவங்க பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 23), கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரனின் நண்பர் அருண் (20). நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் பரதராமியில் கெங்கையம்மன் கோவில் திருவிழாவை காண மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பரதராமி அருகே உள்ள பெருமாள்பல்லி கிராம பகுதியில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து அருண் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த ஈஸ்வரனின் கண்களை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து ரோட்டரி கண் மற்றும் உடல் உறுப்பு தான தலைவர் எம்.கோபிநாத் உதவியுடன் மருத்துவர்கள் கண்களை தானமாக பெற்று சி.எம்.சி. கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com