வயலுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது: சகதியில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி மானூர் அருகே பரிதாபம்

மானூர் அருகே வயலுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்த விபத்தில் சகதியில் சிக்கி புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
வயலுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்தது: சகதியில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி மானூர் அருகே பரிதாபம்
Published on

மானூர்,

மானூர் அருகே உள்ள அயூப்கான்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நயினார். இவருடைய மகன் ராமர் (வயது 29). பொக்லைன் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி 3 மாதங்களே ஆகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமர் ஊரில் இருந்து மானூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி, சாலையோரம் நெல் பயிரிட்டுள்ள வயலுக்குள் பாய்ந்தது.

இதில் ராமருக்கு கால், கன்னம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. வயலில் சகதிக்குள் சிக்கியதால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.

தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அங்கு வந்து, ராமரை மீட்டு மானூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் அங்கு சென்று, ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயலுக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்த விபத்தில் சகதியில் சிக்கி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com