ராட்சத ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது

கன்னியாகுமரியில் ராட்சத ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது
ராட்சத ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சன் செட் பாயிண்ட் கடற்கரையில் சுமார் 35 கிலோ எடை கொண்ட ஒரு ராட்சத ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அதன் ஓடு பாறைகளில் மோதி சேதமான நிலையில் காணப்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து இறந்த ஆமையை கைப்பற்றி எடுத்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com