வீட்டுக்குள் புகுந்த பாம்பு

வேடசந்தூரில் வீட்டுக்குள் புகுந்த நாகபாம்பு பிடிபட்டது.
வீட்டுக்குள் புகுந்த பாம்பு
Published on

வேடசந்தூர்:
வேடசந்தூர் பாத்திமாநகரை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று நேற்று புகுந்தது. இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி, வீட்டுக்குள் பதுங்கி இருந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். அது, நாகபாம்பு ஆகும். 5 அடி நீளம் இருந்தது. பிடிபட்ட அந்த பாம்பை வனப்பகுதியில் தீயணைப்பு படையினர் விட்டனர். வீட்டுக்குள் பாம்பு புகுந்த சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com