பஸ்சில் இருந்து மாணவி கீழே விழுந்த சம்பவம்: தனியார் பள்ளிக்கு ‘சீல்’ வைப்பு

பஸ்சில் இருந்து மாணவி கீழே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி உத்தரவின்பேரில் தனியார் பள்ளிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
பஸ்சில் இருந்து மாணவி கீழே விழுந்த சம்பவம்: தனியார் பள்ளிக்கு ‘சீல்’ வைப்பு
Published on

கலசபாக்கம்,

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் காந்தி நகரில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கீழ்பென்னாத்தூர் சோ.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த லக்ஷியா (வயது 4) என்ற சிறுமி எல்.கே.ஜி. படித்து வந்தார்.

கடந்த மாதம் 24-ந் தேதி பள்ளி பஸ்சில் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்த லக்ஷியா, பின்பக்க அவசர கதவு திடீரென திறந்ததால் ஓடும் பஸ்சில் இருந்து நடுரோட்டில் கீழே விழுந்தார். இந்த மாணவிக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் அந்த பள்ளியில் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் நேற்று முன்தினம் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது பள்ளி பாதுகாப்பற்றும், கழிவறை வசதி இல்லாமல் சுகாதாரமின்றி இருந்தது. மேலும் கூடுதலாக சுமார் 600 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளை மாற்று பள்ளியில் சேர்க்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார். மேலும் பள்ளிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com