நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு

பல்லடம் அருகே நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்போன் வீடியோ அழைப்பின் போது மனைவி முகத்தில் கலர் பொடி இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகை கொண்டாடிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செல்போன் வீடியோ அழைப்பின்போது மனைவி முகத்தில் கலர்பொடி இருந்ததால் விபரீத முடிவு
Published on

பல்லடம்,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் உமேஷ் சகானி (வயது 30). இவர் பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலரும் அங்கேயே தங்கி வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹோலிப்பண்டிகை என்பதால் உமேஷ் சகானி தனது நண்பர்களுடன் ஹோலிப்பண்டிகையை கொண்டாடினார். அப்போது நண்பர்களுக்கு கலர் பொடியை பூசினார். அதுபோல் இவருடைய நண்பர்களும் இவருக்கு கலர் பொடியை பூசினர். பின்னர் உற்சாக மிகுதியில் அனைவரும் மது அருந்தினார்கள். பின்னர் பீகாரில் இருக்கும் மனைவி ரேணுகா தேவியிடம் (25) வீடியோ அழைப்பு மூலம் உமேஷ் சகானி பேசினார். அப்போது ரேணுகா தேவியின் முகத்தில் கலர்பொடி தூவப்பட்டு இருப்பதை வீடியோ மூலம் பார்த்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com