தாய் கண் முன்னே நடந்த சோகம்: மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவி பலி அதிர்ச்சியில் உறவினர் சாவு

மோட்டார் சைக்கிள் மோதி தாய் கண்முன்னே பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த உறவினர் அதிர்ச்சியில் பலியானார்.
தாய் கண் முன்னே நடந்த சோகம்: மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவி பலி அதிர்ச்சியில் உறவினர் சாவு
Published on

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அருகே ருக்மணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் மோனிஷா (வயது 12). அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் ஆர்.கே.பேட்டை அருகே தங்களது உறவினரான வீரராகவன் வசிக்கும் ஜிகிலூர் பேட்டையில் நடைபெறும் திருவிழாவை காண தனது தாயார் சுவேதா (33) உடன் நேற்று முன்தினம் சென்றார்.

இரவு அந்த கிராமத்தில் நடந்த நடன நிகழ்ச்சியை காண தாயாருடன் நடந்து சென்றார். அப்போது வேலூர் மாவட்டம் வெங்குபட்டு கிராமத்தை சேர்ந்த விஜய் (20) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி அதே இடத்தில் தாய் கண் எதிரே மோனிஷா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து நடந்ததும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் தப்பிச்சென்று விட்டார். இதனால் அவரை கைது செய்யும்படி மாணவியின் உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விஜய்யை கைது செய்தனர்.

பின்னர் மோனிஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி மோனிஷா இறந்த தகவல் கேட்டு அவரது உறவினர் வீரராகவன் (60) அதிர்ச்சியில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com