லாரிகள் மோதி விபத்து 3 பெண்கள் உள்பட 7 பேர் சாவு 25 பேர் காயம்

லாரிகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பெண் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயம் அடைந்தனர்.
லாரிகள் மோதி விபத்து 3 பெண்கள் உள்பட 7 பேர் சாவு 25 பேர் காயம்
Published on

நாசிக்,

நாசிக் மாவட்டத்தில் உள்ள மும்பை- ஆக்ரா நெடுஞ்சாலையில் நாசிக்கில் இருந்து கேத்ராய் பகுதியை நோக்கி ஆட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. பசோலே பாடா பகுதியை நெருங்கியபோது இந்த லாரியும் எதிரே வந்த மற்றொரு லாரியும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு, நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 லாரிகளும் அப்பளம் போல் நொறுங்கின. இந்த பயங்கர விபத்தில் லாரியில் இருந்த 3 பெண்கள் உள்பட 7 பேர் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிரிழந்தனர்.

மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 25 பேர் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை மீட்டு அருகில் உள்ள பிம்பல்காவ் பாஸ்வாத் பகுதியில் உள்ள 2 ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரியில் இருந்தவர்கள் கேத்ராய் பகுதியில் மத சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்தது.

மேலும் உயிரிழந்தவர்கள் பெயர் சுசாயில் காவாய்(வயது 66), நிவசுதி லோண்டே(70), சோபா சூர்யவன்சி(60), சுதாம் பதான்கர்(65), ஆசாபாய் கான்தேகர்(45), சம்ருதி தாண்டே(6) மற்றும் சுதாபாய் கந்தேகர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com