சிறுமி கடத்தல் வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்

ஓராண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்
சிறுமி கடத்தல் வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்
Published on

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த செம்மாண்டப்பட்டி ஏனாதி காலனி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). இவருடைய மகன் பிரகாஷ். இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இது குறித்து அந்த சிறுமியின் தந்தை ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் கடத்தி செல்லப்பட்ட தனது மகளை மீட்டுத்தரக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் அந்த சிறுமியின் தந்தை ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் கடத்திச்சென்ற அந்த சிறுமியை மட்டும் சொந்த ஊரில் கொண்டு வந்து விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அந்த சிறுமியை மீட்ட போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கடத்தல் சம்பவம் நடந்த ஓராண்டுக்கு பிறகு நேற்று அவரை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரகாசின் தந்தை மாரியப்பனை இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com