கடையில் ரூ.8 லட்சம் கொள்ளை

கடையில் ரூ.8 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.
கடையில் ரூ.8 லட்சம் கொள்ளை
Published on

மதுரை,

மதுரை எழுகடல் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 43). இவர் கீழஆவணி மூலவீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது மாடியில் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்தபோது கடையின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கடைக்குள் வைத்து இருந்த 8 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் விளக்குத்தூண் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com