வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சமயநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
Published on

வாடிப்பட்டி,

சமயநல்லூர் அருகே சிறுவாலை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மனைவி தாயம்மாள் (வயது 47). விவசாய கூலி தொழிலாளி. இந்த நிலையில் தாயம்மாள் நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பின் அவரது மகன் 8 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் 2 மணிக்கு தாயம்மாள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து துணிமணிகள் சிதறி கிடந்தது. அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரொக்கப்பணம் ரூ.5ஆயிரம், வெண்கல குத்துவிளக்கு, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.37 ஆயிரத்து 300 ஆகும். இது குறித்து தாயம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com