மோட்டார் சைக்கிள், மடிக்கணினிகள் திருட்டு

மோட்டார் சைக்கிள், மடிக்கணினிகள் திருட்டு
மோட்டார் சைக்கிள், மடிக்கணினிகள் திருட்டு
Published on

கோவை

கோவை ஒண்டிப்புதூர் அம்மன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவர் அதே பகுதியில் தொழில் தொடர்பான நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி தனது அலுவலகத்தில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 2 மடிக்கணினிகளை (லேப்டாப்) காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த இம்ரான் அகமத் என்பவர் திருடி சென்றது தெரியவந்தது.இதையடுத்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் நீலிக்கோணாம்பாளையம் என்.கே.எஸ் நகரை சேர்ந்தவர் செல்வன் (36). இவர் இருகூர் ஏ.ஜி.புதூர் ரோட்டில்இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 1-ந் தேதி இவர் தனது கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com