திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குறைதீர் நாள் கூட்டத்தில் 312 மனுக்கள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குறைதீர் நாள் கூட்டத்தில் 312 மனுக்கள்
Published on

திருவள்ளூர்,

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, கடனுதவி, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 312 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுகொண்ட கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் ரூ.13 லட்சத்து 76 ஆயிரத்திற்கான உதவித்தொகைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சுப்பிரமணியம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com