பெரியபாளையம் கோவில் சார்பாக அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு ஆயிரம் உணவு பொட்டலங்கள்

பெரியபாளையம் கோவில் சார்பாக அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு ஆயிரம் உணவு பொட்டலங்கள்.
பெரியபாளையம் கோவில் சார்பாக அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு ஆயிரம் உணவு பொட்டலங்கள்
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இக்கோவிலின் சார்பாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, கட்சூர், வெள்ளியூர், திருவள்ளூர், பெரியபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு நாள்தோறும் ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. இவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோவில் வளாகத்தில் 250 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனைப் பெரியபாளையத்தில் உள்ள ஆதரவற்றோர், சாலையோரம் வசிப்போர் பெற்றுச்செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com