தேர்வு மையத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேர்வு மையத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
Published on

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது. திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றனர். அப்போது பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எம்.ஜெயின் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் கஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com