மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததால் கவலை: - வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என்பதால் வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததால் கவலை: - வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கோழிக்கோடு,

வயநாடு மாவட்டம் புல்பள்ளி அருகே உள்ள முல்லன் கொல்லி பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 80). கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சுமதி (76). இவர்களுக்கு சுஜாதா, சுசிலா, சுமித்ரா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் சுஜாதா, சுசிலாவுக்கு திருமணம் முடிந்து விட்டது.

32 வயது ஆகியும் சுமித்ராவுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியவில்லை. இதனால் கணவன், மனைவி மனவேதனையில் இருந்தனர். தாங்கள் செய்து வரும் கூலிவேலையில் போதிய வருமானம் இல்லையே என்று வருத்தத்தில் இருந்தனர். அவர்களுக்கு 3 மகள்களும் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் சுமித்ரா, அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு சாத்தப்பட்டு இருந்தது. இதனால் அவர் கதவை தட்டினார். ஆனால் திறக்கவில்லை. பல முறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை என்பதால், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சேர்ந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கருணாகரன், சுமதி ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த புல்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 32 வயது ஆகியும் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற காரணத்தால் வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com