கணியூர் அருகே, குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கணியூர் அருகே உள்ள தூங்காவியில் குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கணியூர் அருகே, குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

கணியூர்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் தூங்காவியில் கடந்த சில வருடங்களாக பொதுக்குடிநீர் குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனை கண்டித்து பொதுமக்கள் தூங்காவி ஊராட்சி மன்ற அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

தூங்காவி ஊராட்சியில் கடந்த சில வருடங்களாக பொதுகுழாய்களில் குடிநீர் வினியோகம் செய்வதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் மனு வழங்கியும், நேரடியாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தினசரி வந்தகுடிநீர் 2 நாட்களுக்கு ஒரு முறை பின்னர் வாரத்திற்கு ஒருமுறை, பின்னர் மாதத்திற்கு ஒரு முறை என படிப்படியாக குடிநீர் வினியோகம் செய்வதையே நிறுத்தி விட்டனர்.

கடந்த பல வருடங்களாக வீட்டுகுடிநீர் இணைப்பில் மட்டுமே குடிநீர்வினியோகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே எங்களுக்கு தற்காலிகமாக பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைத்து ஆழ்குழாய் மூலமாக குடிநீர் வழங்கவேண்டும் என்று கூறினார்கள்.

பின்னர் சுமார் 4 மணி நேரத்திற்குள் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்கணேஷ்மாலா நடவடிக்கையால் 9-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் குடிநீர் திடீரென வினியோகம் செய்யப்பட்டது. கடந்த பல வருடங்களுக்கு பிறகு குடிநீர் வினியோகம் செய்யாத பொதுகுடிநீர் குழாய்களில் நேற்று நடைபெற்ற ஊராட்சி மன்ற அலுவலக முற்றுகை போராட்டத்தால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com