ஆடிமாத திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் கிராம பூசாரிகள் பேரவை கோரிக்கை

கிராம கோவில்களில் ஆடி மாத திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என கிராம பூசாரிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
ஆடிமாத திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் கிராம பூசாரிகள் பேரவை கோரிக்கை
Published on

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு கிராம பூசாரிகள் பேரவையின் மாவட்ட அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கிராம பூசாரிகள் பேரவையின் மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிராம கோவில் பூசாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவில்கள் திறக்க அனுமதி வழங்கி இருந்தாலும், திருவிழாக்கள் நடைபெறுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் கிராமப்பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம கோவில்களிலும் பாரம்பரிய வழக்கப்படி திருவிழாக்கள் நடைபெற அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் நலவாரியத்திற்கான விண்ணப்பங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டன.

இதில் தமிழ்நாடு பூசாரிகள் பேரவையின் தஞ்சை மண்டல அமைப்பாளர் பாவேந்தர், திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் அப்புவர்மா, இணை அமைப்பாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com