பிரசவ தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்

பிரசவ தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அறிவுரை.
பிரசவ தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட சுகாதாரப்பணிகள் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேவையான மருந்து, மாத்திரைகளை கிராம சுகாதார செவிலியர் மற்றும் மருத்துவர் மூலம் பெற்று டாக்டர்களின் தகுந்த அறிவுரையின்படி சாப்பிட வேண்டும். அனைத்து கர்ப்பிணிகளும் பிரசவ தேதியின் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக சேர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகளுக்கு சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக கிராம சுகாதார செவிலியர் அல்லது அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலரை தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றோர் வெளியில் செல்வதை கூடிய வரையில் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கொரோனா தொற்று வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும் இது சம்பந்தமாக மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை 93464 67903, 94999 33860 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் உரிய விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com