

இதையடுத்து, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின்படி, மாவட்ட சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் கட்டியாம்பந்தல் குளத்தை ஆய்வு செய்தனர். பின்னர் குளத்து நீரின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்து சென்றனர். ஆய்வுக்கு பின்னரே குளத்து நீரில் நச்சுத்தன்மை உள்ளதா? என்பது தெரியவரும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.