

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்து போனார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இறந்த நபர் நீலநிற பூப்போட்ட முழுக்கை சட்டையும், கிரே நிற கால்சட்டையும் அணிந்து இருந்தார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.