

சாத்தூர்
சாத்தூரில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு சாத்தூர் எஸ்.ஆர்.எம்.எம். கல்லூரியில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பு சாத்தூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சாத்தூர் பகுதியில் உள்ள 351 வாக்குச்சாவடிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான இந்த வாக்குச்சாவடியில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மண்டல அலுவலர்கள் நடத்தினர். இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என 1,771 பேர் கலந்து கொண்டனர்.