சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை: ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை

சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏட்டு விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை: ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை
Published on

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் வீரவேல் (வயது 45). இவர் சூளைமேடு போலீஸ் நிலையத்தில் ஏட்டு ஆக உள்ளார். இவரது மனைவி மீனாம்பாள். இவருக்கு மகேஸ்வரன் என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.

வீரவேல் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் உடல் நிலை சரியில்லாததால் பணிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மிகுந்த விரக்தியில் இருந்த வீரவேல், உணவு சாப்பிட்டபின் தனது படுக்கை அறை கதவை உள்தாளிட்டு தூங்கச் சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீரவேல் வெளியே வராததால் அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது அவர் துணியை வைத்து படுக்கை அறை மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், வீரவேலின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com