திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்கவிழாவிற்கு வந்திருந்த மாணவ-மாணவிகள்.
மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு தொடக்கவிழாவிற்கு வந்திருந்த மாணவ-மாணவிகள்.
Published on

7.5 சதவீத இடஒதுக்கீடு

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் அனுஷியா பேகம் தலைமை தாங்கினார்.

விழாவில் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் வனிதா சிறப்புரையாற்றி பேசும்போது, நீங்கள் டாக்டராகும் நீண்ட நாள் கனவு இன்று பலித்திருக்கிறது. அதில் கவனமாக பயில வேண்டும். அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பூக்கலையை சேர்ந்த சஹானா என்ற மாணவிக்கு மருத்துவ படிப்புக்கு ஆகும் மொத்த செலவை அரசே ஏற்கும். இந்தாண்டு மாணவ-மாணவிகளுக்கு புதிய விடுதி திறக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நல்ல முறையில் சாப்பாடு இங்கு கிடைக்கும் என்றார். மேலும், உங்கள் குழந்தைகளுக்கு மோட்டார் சைக்கிளை வாங்கி தந்து விடாதீர்கள் என்ற பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

உறுதிமொழி

இதைத்தொடர்ந்து நேற்று கல்லூரிக்கு வருகை தந்த அரசு உள் இட ஒதுக்கீட்டால் இடம் பெற்ற 10 மாணவ-மாணவிகள் உள்ளிட்ட முதலாமாண்டு மருத்துவ மாணவ-மாணவிகள் 150 பேரையும் அங்கு பயிலும் மாணவிகள் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். பின்னர் டீன் டாக்டர் வனிதா முன்னிலையில் மாணவ-மாணவிகள் வெண்ணிற கோர்ட் அணிந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழாவில் டாக்டர் ஏகநாதன், டாக்டர் பார்த்திபன் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com