தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையம் 14-வது கட்ட விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 14-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையம் 14-வது கட்ட விசாரணை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணையம் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தியது.

ஏற்கனவே 13 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 366 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் தலைமையில் 14-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. இதற்காக போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 28 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் நேற்று மட்டும் 6 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 2 பேர் மட்டுமே ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். அதே போன்று இன்று (புதன்கிழமை) மதுரையை சேர்ந்த வக்கீல் உள்பட 2 பேரிடம் மட்டும் விசாரணை நடத்துவதற்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளனர். 14-வது கட்ட விசாரணை வருகிற 30-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com