தூத்துக்குடியில் குடோனில் பதுங்கி இருந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் பிடிபட்டனர் போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் குடோனில் பதுங்கி இருந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் குடோனில் பதுங்கி இருந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் பிடிபட்டனர் போலீசார் விசாரணை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கமருதீன். இவருடைய மகன் மீராசா(வயது 44). இவர் கடந்த மார்ச் மாதம், கடல் அட்டை கடத்த முயன்றதாக, தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் மீராசா மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதைத் தொடர்ந்து லூர்தம்மாள்புரம் மெயின் ரோட்டில் உள்ள மீராசாவுக்கு சொந்தமான சங்கு குடோனில் வைத்து, நேற்று முன்தினம் மீராசாவை வனத்துறையினர் கைது செய்தனர்.

அப்போது அந்த குடோனில் இலங்கையைச் சேர்ந்த 7 மீனவர்கள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் உளவுப்பிரிவு போலீசார் நேற்று அந்த குடோனுக்கு சென்றனர். அங்கிருந்த 7 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

அவர்கள் இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வில்பி(51), குயின்டாஸ்(30), ஆரோக்கியம்(39), சமுந்தா அப்பு(43), அந்தோணி ருபசிங்கே(37), விக்கிரமசிங்கே(34), ரவிச்சந்திரன்(44) என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த 29-2-2020 அன்று விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அங்கிருந்து கார் மூலம் 01-03-2020 அன்று தூத்துக்குடிக்கு வந்தனர்.

அவர்கள் லூர்தம்மாள்புரத்தில் உள்ள சங்கு குடோனில் தங்கி இருந்து சங்கு குளிப்பதற்காக வந்ததாக தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதியுடன் அவர்களின் விசா முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து உளவுப்பிரிவு போலீசார் 7 இலங்கை மீனவர்களையும் தாளமுத்து நகர் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com