டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

சேலத்தில், டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
டி.வி. பார்த்ததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

சூரமங்கலம்,

சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி ஆண்டிகவுண்டர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சகாதேவன், கயிறு திரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியம். இவர்களுடைய மகள் கவுரி (வயது 21). இவர் சம்பவத்தன்று வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தெரு குழாயில் தண்ணீர் வந்துள்ளது.

இதனால் மகளிடம் தண்ணீர் பிடித்து வருவாறு பாக்கியம் கூறினார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து டி.வி. பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த பாக்கியம் கோபத்தில் டி.வி.யை அணைத்து விட்டார். இதையடுத்து அவர் தண்ணீர் பிடிப்பதற்கு தெருவுக்கு சென்றார்.

டி.வி.யை தாய் அணைத்து விட்டதால் மனவேதனை அடைந்த கவுரி வீட்டில் உள்ள சமையல் அறைக்கு சென்று தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கவுரி பரிதாபமாக இறந்தார். இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்தது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com