சோழவரம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

சோழவரம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
சோழவரம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
Published on

பெரம்பூர்,

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள வாணியம்சத்திரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் விஜய்சங்கர். இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவரது ஒரே மகன் சஞ்சய் (வயது 15). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். விஜய்சங்கரின் அண்ணன் கவிசக் கரவர்த்தியின் மகன் விக்னேஷ் (14). ஆவடியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று சஞ்சயும், விக்னேஷும் அலமாதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு சென்றனர். பின்னர் இருவரும் அங்கிருந்து தனது நண்பர் தமிழன்பனுடன், அலமாதி வெண்மணி நகர் பகுதியில் சோழவரம் ஏரியில் குளித்தனர். அப்போது சஞ்சய் மற்றும் விக்னேஷ் இருவரும் ஏரியில் மூழ்கினர்.

இதனால் பயந்துபோன தமிழன்பன் ஊருக்குள் ஓடிச்சென்று பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் சிறிது நேரத்தில் சஞ்சய் மற்றும் விக்னேஷ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களது உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com