வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

புதுவையில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
Published on

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற வந்தன. காணும் பொங்கல் தினத்தன்று எடையஞ்சாவடி சாலையில் தனியாக சென்ற பாரதிநகரை சேர்ந்த ரமேஷ் என்பவரை பட்டப்பகலில் வழிமறித்த 3 பேர் அவர் அணிந்திருந்த 8 கிராம் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

2 பேர் கைது

அவர்களது விசாரணையில் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது கருவடிக் குப்பம் பொன்னரசன் (வயது 24), புதுப்பேட்டை ஆனந்த் (23) மற்றும் ரஞ்சித் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டன.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com