பேரிகை, பாகலூர் பகுதிகளில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை

பேரிகை, பாகலூர் பகுதிகளில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பேரிகை, பாகலூர் பகுதிகளில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகேயுள்ள சாரல்தொட்டியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 22). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கணேஷ் பரிதாபமாக இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாகலூர்

ஓசூர் தாலுகா பாகலூர் அருகேயுள்ள கொல்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திருமலேஷ் (வயது 33). கூலித்தொழிலாளி. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த நிலையில் அவரது மனைவி இறந்து விட்டார். இதனால் திருமலேஷ் தனியாக வசித்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com