கடையம் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு: விவசாயி அடித்துக்கொலை நண்பர் உள்பட 2 பேர் கைது

கடையம் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய அண்ணன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையம் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு: விவசாயி அடித்துக்கொலை நண்பர் உள்பட 2 பேர் கைது
Published on

கடையம்:

கடையம் அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய அண்ணன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மைலப்பபுரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் (வயது 59). இவருடைய தம்பி சேகர் (55). இவர்கள் இருவரும் விவசாயிகள்.

இவர்களது வயலுக்கு பொதுவான கிணற்றில் இருந்து முறை வைத்து தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். நேற்று காலை அருணாசலம் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய முறை என்று கூறப்படுகிறது. ஆனால், அவருடைய தம்பி சேகர் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

மண்வெட்டியால்...

அப்போது அங்கு அருணாசலமும், அவருடைய மகன் ராமரும் (31) வந்தனர். உடனே, அருணாசலம் தனது தம்பியிடம், எனது முறையில் எப்படி நீ தண்ணீர் பாய்ச்சலாம் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அருணாசலம், ராமர் ஆகிய இருவரும் சேர்ந்து மண்வெட்டியால் சேகரின் தலையின் பின்பகுதியில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் சேகர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

2 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அருணாசலம், ராமர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை அவருடைய அண்ணன் உள்பட 2 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com