உடன்குடி வாரச்சந்தை 6 மாதங்களுக்கு பிறகு திறப்பு வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

உடன்குடி வாரச்சந்தை 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
உடன்குடி வாரச்சந்தை 6 மாதங்களுக்கு பிறகு திறப்பு வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
Published on

உடன்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது பெரிய வார சந்தையாக உடன்குடி வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தை திங்கட்கிழமை தோறும் செயல்படும். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் இங்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக வாரச்சந்தை மூடப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் உடன்குடி வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி உடன்குடி நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பாபு நேற்று காலையில் வாரச்சந்தையை திறந்து வைத்தார்.

மகிழ்ச்சி

6 மாதங்களுக்கு பிறகு வாரச்சந்தை திறக்கப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இங்குள்ள காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், ஜவுளிக்கடைகள், மளிகை பொருட்கள் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுப்புற பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தேங்காய், பழம், கருப்புக்கட்டி போன்ற ஏராளமான விவசாய பொருட்களை இங்கு கொண்டு வந்துவிற்பனை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com