கூட்டுறவு சங்கங்கள் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை

கூட்டுறவு சங்கங்கள் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணைய தலைவர் சி.பி.ஜி.அன்பு கூறினார்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை
Published on

நன்னிலம்,

ஓமன் நாட்டில் இருந்து காரைக்கால் வந்த உர மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் எடுத்து வந்து திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 526 கூட்டுறவு சங்கங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

உரம் அனுப்பும் பணி

15 ஆயிரம் டன்னில் முதல் கட்டமாக 7,500 டன்னும், 2-வது கட்டமாக 7,500 டன்னும் அனுப்பப்படும்.

யூரியா ஒரு மூட்டை ரூ.285.05-க்கும், டி.ஏ.பி. உரம் ஒரு மூட்டை ரூ.1,187.50-க்கும், பொட்டாஷ் ஒரு மூட்டை ரூ.937.50-க்கும் விற்பனை செய்யப்படும். விவசாயிகளுக்கு தேவையான உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்.

மேலும் காரைக்காலில் இருந்து கூட்டுறவு சங் கங்கள் மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு யூரியா உரம் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறி னார்.

அப்போது கூட்டுறவு இணைப்பதி வாளரும், மேலாண்மை இயக்குனருமான ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் சிவ.நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com