கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகம் முன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் கமி‌‌ஷனர் அலுவலகம் முன் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
Published on

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் விமலாதேவி (வயது 26). கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தனது தாயுடன் வந்தார். பின்னர் திடீரென்று அவர் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதை பார்த்த அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கிக்கொண்டனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் வைத்துக்கொண்டு என்னையும், எனது தாயையும் அடித்து, துன்புறுத்தி, சித்ரவதை செய்கிறார். எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதையொட்டி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்றனர். பின்னர் நுண்ணறிவு பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து புகார் மனு எழுதி வாங்கிக்கொண்டு அவரை செவ்வாய்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். செவ்வாய்பேட்டை போலீசார் விமலாதேவியின் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com