உத்திரமேரூரில் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து

உத்திரமேரூரில் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து எற்பட்டது.
உத்திரமேரூரில் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
Published on

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகம் சூழ்ந்து பயங்கர இடி, மின்னலுடன் சூறை காற்று வீசியது.

இதில் மேனலூர் கிராமத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்துக்கு அருகில் சென்ற உயரழுத்த மின்சார கம்பிகள் காற்றின் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று உரசியது. அதில் இருந்து வந்த தீப்பொறிகள் கிருஷ்ணமூர்த்தியின் கரும்பு தோட்டத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

நல்ல விளைச்சலுடன் அரவைக்கு தயாராக இருந்த 3 ஏக்கரிலான கரும்பு தோட்டம் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கரும்பு தோட்டத்தில் எரிந்த தீயை அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர், ஓலை கொட்டைகளும் தீ விபத்தில் இருந்து தப்பியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com