வடலூர்: பிளஸ்-1 மாணவி, விஷம் குடித்து தற்கொலை

வடலூரில் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
வடலூர்: பிளஸ்-1 மாணவி, விஷம் குடித்து தற்கொலை
Published on

வடலூர்,

வடலூரில் உள்ள சிதம்பரம் சாலையை சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகள் அபிரினா(வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். சமீபத்தில் நடந்த தேர்வில் அவர் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அபிரினா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது பெற்றோர் வெளியே சென்றனர். அபிரினா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து அவர் குடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

இதற்கிடையில் வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்தனர். தள்ளியபடி மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அபிரினாவை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அபிரினா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com