வல்லம், திருக்கோவிலூர் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

டி.டி.வி. தினகரன் அணி சார்பில் வல்லம் மற்றும் திருக்கோவிலூர் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
வல்லம், திருக்கோவிலூர் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Published on

செஞ்சி,

வல்லம் ஒன்றிய டி.டி.வி.தினகரன் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வல்லம் அருகே களையூர் நரிக்குறவர் குடியிருப்பில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கி நரிக்குறவர்களுக்கு சமையல் பாத்திரங்கள், அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய செயலாளர் சேகர் வரவேற்றார். அமைப்பு செயலாளர் கணபதி, பாசறை செயலாளர் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தொழிற் சங்க இணை செயலாளர் வல்லம் காந்தி, ஒன்றிய அவைத்தலைவர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்தி, குமாரராஜா, விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், முத்து குமார், ஒன்றிய நிர்வாகிகள் கண்ணப்பன், பொன்னுசாமி, பிரபா, வீரப்பன், செங்குட்டுவன், உத்தண்டி, ராஜா, முருகன், பன்னீர்செல்வம், பாலு, தங்கவேலு, சிவகுமார், தமிழ்பிரபாகரன், அய்யனாரப்பன், அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருக்கோவிலூர் அருகே உள்ள நெற்குணம், ஏமப்பேர், வீரபாண்டி, கொடுக்கப்பட்டு, காங்கியனூர் மேட்டுச்சேரி, மேலந்தல், தேவரடியார்குப்பம், அத்தியந்தல், கொங்கனாமூர், வடக்குதாங்கல் மற்றும் மணலூர்பேட்டை பகுதியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஒன்றிய செயலாளருமான சேவல்.கோதண்டராமன் தலைமை தாங்கி ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி னார். இதேபோல் மணலூர்பேட்டையில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சங்கர் தலைமையில் நடந்த விழாவில் சேவல். கோதண்டராமன் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மணம்பூண்டி ஒன்றிய செயலாளர் செந்தில்குமரன், நகர செயலாளர் அன்புமுருகன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி சையதுஅகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் சேவிராஜா, ரகு, ஏழுமலை, கோவிந்தன், குணசேகரன், வேடிச்சிகன், தன்ராஜ், பாலாஜி, அரி, திருமால், ராஜி, வெங்கடேசன், அய்யனார், ரகோத்துமன், இருதயராஜ், சத்தியமூர்த்தி, தணிகாசலம், ரங்கநாதன், ராமசாமி, கதிர்வேல், நகர இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், நசூர் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாணவரணி செயலாளர் அப்பு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com